ரஹ்மத் மன்சூரினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

0
117
 அம்பாறை மாவட்டத்தில் தேவையுடைய மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாக பல்வேறு கல்வி சார் நல உதவிகளை கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மேற்கொண்டு வருகின்றது இதன் அங்கமாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் ஒலுவில்-அஷ்ரப் நகர் பிரதேசத்தில் பொது மக்கள் சந்திப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழன்(16) ஏ.அஸீஸ் தலைமையில்,எம்.அஸ்கான் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களின் நலன்கருதி பாடசாலை உபகரணங்கள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இதன் போது பொது மக்கள் தமது பிரதேசத்தில் நிலவும் அடிப்படை தேவைப்பாடுகள் தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கருத்துரைத்தனர் மக்கள் தேவைப்பாடுகள் பற்றி கேட்டறிந்து கொண்ட ரஹ்மத் மன்சூர் தன்னால் முடிந்த உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அஷ்ரப் நகர் பிரதேசமக்கள்,நலன்வி்ரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள்,என பலர் கலந்துகொண்டனர்.
 (எம்.என்.எம்.அப்ராஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here