வடைக்குள் கரப்பான் பூச்சி; கடைக்கு சீல்; ஜனவரி 25க்கு வழக்கு ஒத்திவைப்பு

0
227

கரப்பான் பூச்சி வடையை விற்பனை செய்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்ட நபர், இதுதொடர்பில் யாழ்.நகர பொதுசுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்தார்.

குறித்த உணவகத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் கடையை பரிசோதனை செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதனைதொடர்ந்து குறித்த உணவகத்திற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் சென்று பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். இதன்போது உணவகம் மற்றும் அதன் சமையலறையில் பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டன. இதனையடுத்து,  யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்.நகர பொது சுகாதார பரிசோதகரினால் உணவக உரிமையாளர், சமையலறை உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இரு வழக்குகளையும் விசாரித்த நீதவான் உணவகம், அதன் சமையலறை ஆகியவற்றுக்கு மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டதுடன், இரு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் சரீர பிணையில் செல்ல அனுமதித்து மேலதிக நீதவான் வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here