வழமைக்குத் திரும்பிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்

0
23
passport office- battaramulla office-newsinlanka.com

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில், பல நாட்களாகக் காணப்பட்ட நெரிசல் (30) முற்றாக நீங்கியுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே, குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வளாகத்தைச் சுற்றி பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

ஆயினும், போக்குவரத்து நெரிசல் (30) வழமைக்குத் திரும்பியதாகவும், கடவுச்சீட்டுக்களை நெரிசலின்றி பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

மேலும், பல நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரும் வரிசையில் ‘டோக்கன்’ வழங்கவும் பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here