வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் நாளைமுதல் ஆரம்பம்

0
43

வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு சுமார் 8000 பேரை பணியில் அமர்த்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று 2ஆம் திகதி காலையிலிருந்து தபால் ஊழியர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகளை உரிய முகவரிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்கு தபால் திணைக்களத்திற்கு உரித்தான வாகனங்களும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
விசேட பாதுகாப்புடன் வாக்குச்சீட்டுகள் கொண்டு செல்லப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here