வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தது ; நால்வர் சிக்கினர்

0
224

வரக்காபொல, தும்பலியத்த பகுதியில் வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

அகுருவெல்ல – வரக்காபொல வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு மாடி வீடொன்றில் சிக்கியிருந்த நால்வரை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

இதில் ஒருவர் (தந்தை) மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனையவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

50 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலச்சரிவினால் வீடு முற்றாக இடிந்துள்ள நிலையில், வரக்காபொல பொலிஸாரும் கிராம மக்களும் இராணுவத்தினருக்கு ஆதரவாக வீட்டினுள் இருந்த ஏனையவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here