அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (11) முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி சித்திரைத் புத்தாண்டு விடுமுறை 09 நாட்கள் ஆகும். அதிலும் லீவு நாட்கள் ஏழு நாட்கள். ஆக இரண்டு நாட்கள்தான் விடுமுறையாகக் கணிக்கப்படும்.
அதன்படி, முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பமாகி மே 9 ஆம் திகதி வரை நடைபெறும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
( வி.ரி.சகாதேவராஜா)