கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை வெடித்ததில் ஆறு பொலிஸார் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த 6 பொலிஸ் அதிகாரிகளைத் தவிர, இரண்டு பொதுமக்களும் காயமடைந்தனர்.
விபத்து இடம்பெற்ற போது கடமையில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தவர்களை கண்டி வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.