வைத்தியசாலையில் இடை நடுவில் சிக்கிக் கொண்ட மின் தூக்கி

0
336

கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட மின் தடையால் 10 பேருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, லிப்ட் இடை நடுவில் சிக்கிக் கொண்டுள்ளது. இதன் போது சுமார் பத்து பேர் லிப்டில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்போது அந்த குழுவினர் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் லிப்டில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த நேரத்தில் வைத்தியசாலையின் ஜெனரேட்டர் இயங்காத காரணத்தினால் இப்பிரச்சினை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here