ஹேயஸ் தோட்டம் மேல் பிரிவில் ஆணின் சடலம் மீட்பு!

0
221

எம்பிலிபிட்டிய கொலோன்ன தேர்தல் தொகுதியின் உல்லிந்துவாவ ஹேயஸ் தோட்டம் மேல் பிரிவில் நேற்றைய தினம்(16) சிறு கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து ஆணின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டது.

உல்லிந்துவாவ ஹேயஸ் தோட்டம் மேல் பிரிவவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மலையமூப்பன் மோகன்ராஜ் (வயது 51) என்ற தொழிலாளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி தோட்டத் தொழிலாளர்கள் நேற்று காலை தொழிலுக்கு செல்லும்போது கால்வாய் ஒன்றின் அருகில் இவ்வாறு ஆணின் சடலம் ஒன்று கிடந்ததை கண்டு பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிசாரினால் மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் குறித்து பொலிசாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்சடலம் மரண பரிசோதனைக்காக நேற்றையதினம்(16) எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சிவா ஸ்ரீதரராவ் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here