10 நாட்களில் 7 இலட்சம் லிற்றோ எரிவாயு விநியோகம்

0
198

எரிவாயு பிரச்சினையை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் 100 வீதம் தீர்க்க முடியும் என லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களில் 12.5 கிலோகிராம் நிறையுடைய சுமார் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், மேலும் 40 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 47 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களுக்கான தேவைப்பாடு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் எரிவாயு பிரச்சினையை 100 வீதம் தீர்க்க முடியும் என லிற்றோ தலைவர் முதித பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here