100 ஆவது கவியரங்க விழாவும் “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும்

0
90

வகவம் எனும் வலம்புரி கவிதா வட்டத்தின் 100 ஆவது கவியரங்க விழாவும் “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும் இன்று 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (26/05/2024) பி.ப. 3.30 மணிக்கு, கொழும்பு 7 ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தில் நடைபெறும். வலம்புரி கவிதா வட்டத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக ஈஸ்வரன் பிரதர்ஸ் அதிபர்    கணேஷ் ஈஸ்வரன் கலந்து கொள்கிறார். வகவ சிரேஷ்ட ஸ்தாபகர்,  சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி முன்னிலை வகிக்கிறார்.

சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா  விசேட பேச்சாளராக பங்கேற்கிறார். கலாபூஷணம் தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் 100 ஆவது கவியரங்கம் இடம்பெறும்.

இந்நிகழ்வின் போது வகவக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும் இடம்பெறும். வகவப் பொருளாளர் ஈழகணேஷுக்கு வகவ விருதும் வழங்கப்படும்.  வலம்புரி கவிதா வட்டச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here