1700 ரூபாய் சம்பள உயர்வு : பூண்டுலோயா பேர்லண்ஸ் தோட்டத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

0
196
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பில்  தொழில் அமைச்சு ஊடாக வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது.
 தோட்ட தொழிலாளர்களுக்கு சாதகமான வழங்கப்பட்டுள்ள நீதிக்கு  பூன்டுலோயா பிரதேச தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் வெற்றி களிப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது பூண்டுலோயா பேர்லண்ஸ் தோட்ட நான்கு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களும் , சீன் தோட்ட தொழிலாளர்களும் தங்களது தோட்ட ஆலயங்களில் ஒன்று கூடி பூசை வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர்.
இந்த நிகழ்வுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி கே.ரமேஷ் குமார் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆ.ரமேஸ்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here