முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரர் மாவை சேனாதிராசாவின் பூதவுடல், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (29) இரவு காலமானார்.