2 ஆவது விருப்பு வாக்கு எண்ணுவதற்கு தயாராகுக: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

0
91

அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

அதன்படி, கூடுதல் அதிகாரிகளை தயார்படுத்தும் பணியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை நிலையங்களின் எண்ணிக்கை 1,274 ஆகும்.

இதற்கிடையில், வாக்குச்சாவடிகளில் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here