2023 பெப்ரவரியில் தேர்தல்

0
281

24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்கு 8,327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை, இம்மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் (டிசம்பர்) 26 முதல் 30ஆம் திகதி வரையில் கோருவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டம் 2017 இன் விதிகளின்படி 2023 பெப்ரவரி பிற்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here