231,982 பரீட்சார்த்திகள் உயர் தரத்திற்கு தகுதி 498 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

0
184

2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகளில் 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி சித்தி பெற்ற மாணவர்களில் 10,863 பேர் 9 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். 6,566 மாணவர்கள் அனைத்துப் சித்தி பெறவில்லையெனவும் 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here