3 ஆம் திகதி காணாமல் போன இளைஞன் நுவரெலியாவில் சடலமாக மீட்பு

0
620
நுவரெலியாவில் கடந்த 3ஆம் திகதி காணாமல் போன இளைஞன் சடலமாக இன்று நுவரெலியா கிறகறி வாவிக்கு செல்லும் பீதுருதாலகால மலை நீரோடையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சசிதரன் வயது 20 என்றஇளைஞன்  கடந்த 3 ஆம் திகதி மாலை நுவரெலியா நகரிற்கு சென்ற இளைஞன் வீடு திரும்பாமல் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இளைஞனின் பெற்றோர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 12 நாட்களாக நுவரெலியா பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் பம்பரகலை தோட்ட மக்களால் தேடப்பட்டுவந்த நிலையில் நேற்று நீரோடையில் சடலமாக நுவரெலியா பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா பதில் நீதவான் டினிகோடன் ராயன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்படி உத்ததரவு பிறப்பித்தார் இன்று மாலை 4-45 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ரமணன், செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here