39 வருட ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறும் திருமதி பிரேமாவதி ஜெயராம்

0
273

ஹட்டன்- ஹைலன்ஸ் தேசிய கல்லூரியின் ஆசிரியை திருமதி பிரேமாவதி   தனது முப்பத்தொன்பது வருட ஆசிரியப் பணியிலிருந்து நேற்றுடன் (25.07.2024) ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை ( மட்டுவில்) பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1985 ஆம் ஆண்டு பட்டதாரி நியமனத்தினூடாக ஆசிரிய சேவைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

அன்று முதல் மலையகத்தின் குறிப்பாக நுவரெலிய மாவட்டத்திலுள்ள பத்தனை டிம்புள்ள த.ம.வி, வட்டவளை த.ம.வி , ஹட்டன் சென்கெபிரியல் மகளிர் கல்லூரி, குயில்வத்தை த.ம.வி, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி ஆகிவற்றிலே தனது நிறைவான சேவையினை வழங்கியுள்ளார்.

தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தை சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பிப்பதில் தேர்ச்சி பெற்று விளங்கிய இவர் அதனூடாக சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற காரண கர்த்தாவாக திகழ்ந்துள்ளார்.

இன்று தனது அறுபதாவது அகவையில் கால் பதிக்கும் ஆசிரியை பிரேமாவதி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

Ahilan Sir FB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here