450 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0
328

450 போதை   மாத்திரைகளை   வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தானியகம பிறீமா விடுதிக்கருகிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வரும் 25 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் அதிரடி படையினர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் விசாரணைகள்  இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here