5 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

0
140

ஜூன் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாணத்தில் உள்ள 5 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை அதி விசேட வர்த்தமானி ஊடாக மாற்றியமைத்துள்ளதுடன், அவ்வமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பு ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது.

 

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் ரூ. 8,031 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 2,695 வேலைத்திட்டங்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வருடத்தில் வலுவான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, புதிய கட்டமைப்பினை உருவாக்குவதற்காக இவ்வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக, ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் 9 மாகாணங்கள் உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே இவ்வாறான ஒரு அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் அலுவலகம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here