அரசுத் துறையில் பணிபுரியும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில், இன்று இடைக்கால பட்ஜட் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக குறைக்கப்படவுள்ளது எனவும், தற்போது அரச சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இவ்வருடம் டிசெம்பர் 22 ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்