78 ஆயிரம் போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்பு

0
289

கொழும்பு 15, மோதரை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 78,600 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மோதறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்படி போதை மாததிரைகளை மீட்டுள்ளனர்.

நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில், சந்தேகநபர் ஒருவர் 4,800 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைனத் தொடர்ந்து, சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கமைய, களுபோவில பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 73,800 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here