8  பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ;  3 பெண் பிள்ளைகள்  மாயம்

0
218

அம்பாந்தோட்டை, சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ, மஹாவலிகடஆர குளத்தில் தோணி ஒன்றில் பயணித்த 8 பேர், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 3 பெண் பிள்ளைகள் காணமல் போயுள்ளனர்.

இன்று முற்பகல் குறித்த குழுவினர் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள தமது உறவினர் வீடொன்றில் இடம்பெற்ற தான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குருணாகல், பிஹிம்புவ பிரதேசத்திலிருந்து அங்கு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மஹாவலிகடஆர குளத்திற்கு அருகில் இருந்த மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சிறிய தோணி ஒன்றில் ஏறி பயணித்த நிலையில் அது கவிழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

இதன்போது அதிலிருந்த 5 பேரை பிரதேசவாசிகள் உயிருடன் மீட்டுள்ளனர். ஆயினும் குறித்த தோணியில் பயணித்த 10, 17, 18 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கடற்படையின் சுழியோடிகள் சூரியவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன பெண் பிள்ளைகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here