81ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு விசேட நினைவு முத்திரை – தபால் உறை வெளியிட்டு வைப்பு

0
152

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர், கம்மெத்த ஸ்தாபகர் காலஞ்சென்ற ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் 81ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு விசேட நினைவு முத்திரை மற்றும் தபால் உறை என்பன இன்று(19) வெளியிடப்பட்டது. இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமஹேந்திரன் உள்ளிட்ட உயர்முகாமைத்துவத்தினர் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தபால்மா அதிபர் ருவன் சத்குமார உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றதுடன், பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், பேராசிரியர் பீ திசாநாயக்க மற்றும் பேராசிரியர் திலக் பண்டார உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

தபால்மா அதிபர், பிரதி தபால்மா அதிபர் மற்றும் கொழும்பு பிராந்திய தபால் அத்தியட்சகர் ஆகியோரின் தலைமையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

முதலாவது விசேட நினைவு முத்திரை மற்றும் தபால் உறையை கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமஹேந்திரன் பெற்றுக்கொண்டார்.

நினைவு முத்திரையை நாட்டின் பல முத்திரைகளை வடிவமைத்த சனத் ரோஹண விக்ரமசிங்க வடிவமைத்திருந்தார்.

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரைகளுள் ஒன்றாகப் பயன்படுத்த முடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here