9 A சித்தி பெற்ற மாணவன் மீது தீ வைப்பு

0
440

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்ற மாணவன் தீ விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று கண்டி , அம்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

தான் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றதை தமது பாட்டியிடம் கூறிவிட்டு, தந்தையுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் குறித்த மாணவனின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே பலத்த காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here