மஸ்கெலியா பிரவுன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் பிறந்துள்ளன. 32 வயதுடைய கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற பெண்ணே இவ்வாறு மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே பத்து மற்றும் எட்டு வயதினை கொண்ட இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவை சதீஸ்