மரம் முறிந்து விழுந்தமையே சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணம் – Update news

0
454

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் மரத்தில் இருந்து வழுக்கி உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

விசாரணையின் பின்னர் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தனது அத்தையுடன் விறகு தேடி காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, அத்தை விறகு தேடி கொண்டிருந்த வேளையில், சிறுவன் மரத்தில் ஏறியயதையடுத்து குறித்த மரம் முறிந்து கீழ் பகுதியில் இருந்த கற்பாறையில் விழுந்தமையினால், தலைப்பகுதிய பகுதி அடி பட்டு அவ்விடத்திலேயே சிறுவன் உயயிரிழந்துள்ளார் என்றும், உயிரிழந்த நிலையில் அவனது அத்தை கண்டு 1990 அவசர அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வண்டி சென்று பார்த்த போது சிறுவன் இறந்து நிலையில் உள்ளதால் அவர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஆனந்த பத்மஸ்ரீ விசாரணைகளை முன்னெடுத்தார். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்லோ தோட்டப், ஆடைத் தொழிற்சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய எஸ்.ஜே.ரஜிந்த துல்சான் குணசேகர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here