துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான எதிர்வரும் 10 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1443 துல்ஹஜ் மாத தலைப்பிறை நேற்றையதினம் நாட்டின் சில பகுதிகளில் தென்பட்டுள்ளதையடுத்தே, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பிறைக்குழு ஆகியன இணைந்து இவ்வறிவிப்பை ஏகமனதாக வெளியிட்டுள்ளது.