நுவரெலியாவில் இரு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

0
692

நுவரெலியாவில் அமைந்துள்ள, நர்த்தனாலய நடனக்கல்லுரியின் மாணவிகள் இருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் இம்மாதம் 26ஆம் திகதி நுவரெலியா சினிசட்டா நகர மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நர்த்தனாலய நடனக்கல்லுரியின் இயக்குநரும் நடன ஆசிரியருமான எம். ரமேஸ்காந்தின் மாணவிகளான செல்வி ரமேஸ் குமார் ரஷ்மிதா , விஜயசுந்தரம் வினுஷா ஆகிய இருவரின் பரதநாட்டிய அரங்கேற்றமே இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீ.இராதாகிருஷ்னண் மற்றும் அருட்தந்தை சிவாந்த ரொட்ரிகோ, ராகினி திருக்குமரன் (கல்வி தேசிய நிறுவகம்), சூரியயாழினி வீரசிங்கம் (நிருத்திய நிகேதன கலைக் கல்லூரி) ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here