அட்டன் மலசலகூடத்தில் 2 இலட்சம் ரூபா மாயம் – வீடியோ இணைப்பு

0
1100

அட்டன் பொது மலசலகூடத்துக்குச் சென்ற பெண்கொருவரின் இரண்டு இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது. இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,

மேற்படி குறித்த பெண் கொழும்பிலிருந்து இபோ.ச பஸ் வண்டியில் அட்டன் வந்துள்ளார். பின்னர் பொது மலசலகூடத்துக்கு சென்ற போது , உள்ளே நுழைவதற்கு முன்னர் மலசலகூடத்திற்கு அருகில் இருந்தவரிடம் தன்னுடைய கைப்பையை கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

உள்ளே போய் வெளியே வந்து பையை பார்க்கும் போது குறித்த பையில் பணம் இருக்கவில்லை எனத் தெரியவருகிறது. . குறித்த பெண் பஸ்ஸில் பணத்தைத் தொலைத்தாரா அல்லது பையை தற்காலிகமாக வைத்திருந்தவர் எடுத்தாரா?  என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

மலசலகூடத்தக்கு அருகில் வந்து பார்வையிட்ட அட்டன் பொலிஸார் குறித்த நபர்களை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்குச் அழைத்தச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here