டெக்டர் விபத்து : சாரதி வைத்தியசாலையில்

0
82
நுவரெலியாவிலிருந்து வெளிமடை பகுதியை நோக்கி பயணித்த டெக்டெர் ஒன்று கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரேந்தபொல பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (22) மாலை இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் டெக்டரை செலுத்தி சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கு உள்ளான டெக்டர் நுவரெலியா பகுதியிலிருந்து குப்பைகள் ஏற்றி சென்ற டெக்டர் எனவும் ரேந்தபொல பகுதியில் பெய்து வரும் அதிக மழைக்காரணமாக வீதியை விட்டு விலகி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை  கெப்பட்டிபொல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க கடந்த வியாழக்கிழமை (20) நுவரெலியா-வெளிமடை பிரதான வீதி ரேந்தபொலை பகுதியில் வீதி ஓரத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த (50) வயது பெண் ஒருவர் மீது கார் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் விபத்துக்குள்ளான பெண் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் விபத்துக்கு காரணமான கார் சாரதியை கெப்பட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here