உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது – அரசு அதிரடி அறிவிப்பு

0
139

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாதென, பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் மேலும் பேசும்போது,
“பொலிஸ் மா அதிபர் பதவியை தேசபந்து தென்னக்கோன் வகிக்கிறார். அதில் எவ்வித மாற்றமுமில்லை. ஜனாதிபதி நினைத்தபடி மற்றுமொரு பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கவும் முடியாது. பொலிஸ் மா அதிபர் பதவி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

பாராளுமன்றம் தான் அரசியலமைப்புச் சபைக்குப் பொறுப்பு. வேறு யாரும் அதற்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது. அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்த முடியாது. நீதிமன்றமும் அதனைச் செய்யமுடியாது. பாராளுமன்றம் மகத்துவம் மிக்கது. உயர் நீதிமன்றத்திற்கு இதில் அதிகாரமில்லை.
எனவே, பொலிஸ் மா அதிபர் மீதான உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை செல்லுபடியாகாது” என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here