ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணம் ரியோ ஐஸ்கிரீம் கடைக்குச் சென்று அங்கு சிறிது நேரத்தை பொதுமக்களுடன் செலவிட்டனர்.
இன்று விஷேட விஜயமாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இன்றைய நிகழ்வின் இறுதியாக யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள ரியோ ஐஸ்கிரீம் கடைக்கும் சென்று ஐஸ் கிரீம் உண்டு அங்கிருந்த மக்களுடனும் மகிழ்ந்திருந்தார். அதை அறிந்து அவ்விடத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் ஜனாதிபதியுடன் தாமும் நின்று ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அவர்கள் மகிழ்ந்திருந்த பொழுதாக அமைந்தது.