பொகவந்தலாவ நகரில் கட்சிபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொடிகள் மற்றும் பதாதைகளுக்கு இனந்தெரியாதவர்களால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
இந்த சம்பவம் 17.08.2024.சனிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 18.08.2024.ஞாயிற்றுக்கிழமையான இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கலந்துகொள்ளவிருக்கும் மக்கள் சந்திப்பிற்காக குறித்த கொடிகளும் பதாதைகளும் காட்சிபடுத்தபட்டிருந்ததாக கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்
பொகவந்தலாவ நகரில் சேதப்படுத்தபட்டு கிடந்த கொடிகள் மற்றும் பதாதைகள் பொகவந்தலாவ பொலிஸார் மீட்டுள்ளதோடு மீட்கப்பட்ட பதாதைகளையும் கொடிகளையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இதேவேளை தேர்தல் சட்டத்திட்டத்திட்டங்களுக்கமைய கட்சியின் கொடிகள் மற்றும் பதாதைகள் காட்சிபடுத்த முடியாதுயென தேர்தல் ஆனைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது .
எஸ் சதீஸ்