எமது சமூகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகம், போதை பொருள் பாவனை, பாடசாலை மாணவர்கள் இடைவிலகல், தாகத உறவின் தாக்கம் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வீதி நாடகங்களை வட்டகொடை, ஒலிரூட், மடக்கும்பரை உள்ளிட்ட 5 பிரதேசங்களில் எமது நவரச நாடக மன்றத்தினூடாக கடந்த நாட்களில் அரங்கேற்றம் செய்திருந்தோம்.
வட்டகொடையில் உள்ள ZIYON KIDS நிறுவனத்தினர் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து மிகவும் சிறந்த முறையில் நடாத்தியிருந்தனர். ஆலய முற்றம், காமன் பொட்டல், கொழுந்து நிறுக்கும் மடுவம் என அழைந்து திரிந்து அரங்கேற்றிய எமது படைப்பு பார்வையாளர்கள் பலருக்கும் சிந்தனை விருந்தாக மாறியிருந்தது. வீதி நாடகமேடை விவாத அரங்கமாக முகிழ்ந்ததோடு எமது நடிகர்கள் தமது நடிப்பாற்றலையும் திறன்பட வெளிபடுத்தினர்.
அதேபோல இறுதி அம்சமாக எமது குழுவினரால் அரங்கேற்றம் செய்யப்பட்ட மேடை நாடகம் பலரின் மனங்களை கவரந்ததோடு பார்வையாளர்களின் கண்ணீரை பதம் பார்த்து நிகழ்வின் வெற்றிக்கு கொடி காட்டியது.