Breaking news- தேர்தலுக்காக பாடசாலைகள் மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
458

தேர்தலுக்காக வாக்குப்பதிவு மையங்களாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 19, 20ஆம் திகதிகளில் தயார்படுத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு முறையான கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அக்கடித்தில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைகளை பரிசீலித்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கல்வி அமைச்சு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here