பிளக்பூல் புனித அந்தோனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு புதிய கட்டிடம்

0
194

நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிளக்பூல் புனித அந்தோனியார் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் புதிய கட்டிடம் ஒன்று (11.09.2024) காலை திறப்பு விழா செய்து வைக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் ஜி.ஜெயகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் இக் கட்டிடம் அமைக்க நன்கொடை வழங்கிய “PR AID PR “நிறுவனத்தின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டு கட்டத்தை திறப்பு விழா செய்து வைத்தனர்.

கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைக்கப்பட்ட இந்த கட்டிடம்
“PR AID PR” குடும்ப தன்னார்வ தொண்டு நிறுவன தம்பதிகளான திருமதி சாந்திராஜா எண்டரீட்டா ஆகியோரின் 25 வது ஆண்டு திருமண விழாவின் ஞாபகமாக திறப்புவிழா செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“PR AID PR” என்ற குடும்ப தன்னார்வ தொண்டு நிறுவனம்
கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக சேர்த்து வரும் ஒரு நிறுவனம் என்பது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும் இந்த நிகழ்வில் நுவரெலியா கல்வி வலைய ஆலோசனை வழிகாட்டாளர்
திருமதி பி.மங்கலேஸ்வரி, வளவாளர் பி.விஜயகுமார் ஆகியோருடன் “PR AID PR” நிறுவன முக்கியஸ்தர்களான எண்டன் சுரேஸ் மரியாம்பிள்ளை (யூகே) மற்றும் ஜூட் மெலின்டாஸ் பிலீப் (கனடா) ஆசிரியை ரொசிட்டா பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here