உயிருக்காகப் போராடும் யானை : காப்பாற்ற தீவிர முயற்சி

0
24

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் காட்டு யானையொன்று நடக்க முடியாத நிலையில் உயிருக்காக போராடி வருகின்றது.

குறித்த யானைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வனஜீவராசிகள் திணைக்களம், ஓட்டமாவடி பிரதேச செயலகம், பிரதேச சபை, கல்குடா டைவர்ஸ், அகீல் எமேர்ஜென்ஸி யுனிட் ஆகியன தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் அவர்களின் முயற்சியினால் நீர் வழங்கப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here