பசில் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தொரடர்பில் வெளியான தகவல்

0
20

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ,  பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இன்று அதிகாலை நாட்டை விட்டு அவசரமாக வெளியேறியுள்ளார். நாளை தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில்இ அவர்கள் இன்று காலை அவசரமாக நாட்டை விட்டு வெளியேறியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.05 இற்கு எமரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய தவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ‘கோல்ட் ரூட்’ முனையத்தை பயன்படுத்துவதற்கும் அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்ஷ டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளையில்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவின் மாமியார்இ இரு பிள்ளைகள் இ இரு பணிப்பெண்கள் மற்றும் உறவினரான மற்றொரு பெண் ஆகியோரும் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக டுபாய்க்கு பயணமாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் அறுவரும் இன்று காலை 10.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் மற்றொரு விமானத்தின் ஊடாக டுபாய் பயணமாகியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here