ஜனாதிபதியின் ஆதரவாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

0
209

ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற மகிழ்ச்சியில் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த ஆதரவாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை இலிபா கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த நபர் பட்டாசு கொளுத்தி விட்டு சிறிது தூரம் சென்றுள்ளார், அது வெடிக்காததால், அருகில் சென்று சோதனையிட்ட போது, திடீரென வெடிக்க தொடங்கியுள்ளது.

உடலின் பல பாகங்களிலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியால் பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டாமென அறிவிப்பும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here