பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்

0
89

பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்  என, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

“பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் பாராளுமன்றத்தில் ஆசனத்தைப் பெறவோ மாட்டேன். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் இனிமேல் செயற்படுவேன்” எனவும் அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here