இன்று மணிவிழா காணும் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

0
8

பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா இன்று (28) வைரவிழா அகவையில் கால் பதிக்கிறார்.

36 வருட கால கல்விச் சேவையிலிருந்து சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நேற்று (27)வெள்ளிக்கிழமை தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.

இவரது 60 வது அகவை பிறந்த நாளான இன்று(28) சனிக்கிழமை பாசிக்குடா அமயா விடுதியில் அவர் சார்ந்த மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 1991/92 புலன அணியினர் மணிவிழாக் கொண்டாட்டத்தை பொன் .நடராஜா தலைமையில் முன்னெடுக்கின்றனர்.

சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களாக மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின் தலைவருமான விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா( ஜே.பி) காரைதீவைச் சேர்ந்தவராவார்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மிகவும் நெருங்கிய பற்றாளனான இவர் பத்து வருடங்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் 26 வருடங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார் .

பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். பட்டப்பின் கல்வி டிப்ளோமோ மற்றும் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றவராவார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தர அதிபராவார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவராக காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றத் தலைவராக இந்துசமய விருத்திச்சங்க தலைவராக காரைதீவு விளையாட்டு கழகத் தலைவராக கம்பன் கலைக்கழகத் தலைவராக கிராம அபிவிருத்தி சங்க தலைவராக இவ்வாறு பல அமைப்புகளில் தலைவராக முன்னணி சமூக செயற்பாட்டாளரான அவர் ஒரு தலைசிறந்த ஊடகவியலாளரும் கூட.

சம காலத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் ஆலோசகராக மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆலோசகராக இவ்வாறு பல நடிபங்குகளினூடாக சமூக சமய சேவையாற்றி வருகிறார்.

காரைதீவின் பழம் பெரும் ஆசிரியர் வே.தம்பிராஜா தங்கநாயகம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வராவார்.

காரைதீவில் 1964.09.28 அன்று பிறந்தார் .

ஆரம்பக் கல்வியை ராமகிருஷ்ணசங்க ஆண்கள் பாடசாலையிலும் பின்னர் விபுலானந்த மத்திய கல்லூரியிலும் மற்றும் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.

“ஊழியின் ஆழி” எனும் வரலாற்று நூலை 2005 வெளியிட்டார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் மன்ற தலைவராக பணியாற்றிய வேளை அங்கு “கலைச்செல்வி” நூலுக்கு நூலாசிரியராகவும் சுவாமி விபுலானந்த பணிமன்றத்தின் அடிகளார் நினைவாலய மலருக்கும் சுவாமி நடராஜானந்தா ஜீயின் நூற்றாண்டு விழாவில் சேவையின் சிகரம் எனும் நூலையும் ஊரா வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையின் அதிசிறந்த ஊடக விருதான மக்கள் சேவை ஊடக விருது 2007 வீரகேசரி கட்டுரை வெளியீட்டுக்காக பெற்றார் .
இத்தாலி பாங்க்கொக் மலேசியா சிங்கப்பூர் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று சிறப்பு அனுபவத்தை பெற்றிருந்தார்.

தேசமான்ய வித்தகர் திகாமடுல்ல அபிமானி விபுலமாமணி வாழ்நாள் சாதனையாளர் வித்யசாஹித்யன் வித்யகலாசிறி கலைச்செம்மல் போன்ற இன்னோரன்ன விருதுகளைப் பெற்றவர்.
அவர் மேலும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பிரசங்கங்களில் ஈடுபட்டு வருகிறார்.

நமது நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here