லெபனான் – சிரியாவுக்குச் செல்ல வேண்டாம்

0
9

லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களையும் அவதானமாக இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வெளியில் நடமாடுவதைக் தவிர்ப்பது மற்றும் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் வழக்கமான தொடர்பைப் பேணுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தூதரகம் அல்லது தூதரகத்தை [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது பின்வரும் அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொள்ளலாம்:

சனத் பாலசூரிய: +94 771102510

செல்வி பிரியங்கி திசாநாயக்க: +94 718381581

ஃபஹ்த் ஹவ்வா: +961 81485809

டமாஸ்கஸில் உள்ள இலங்கையின் தூதுவர், டாக்டர். அல் ட்ரூபி: +963 944499666, +963 933858803 –

மின்னஞ்சல்: [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here