புதிய கடவுச்சீட்டின் உட் பகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளவை என்ன

0
104

முன்பதிவு செய்யப்பட்டுள்ள 75,000 கடவுச்சீட்டுக்களை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு தட்டுப்பாடு மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.பல மாதங்களாக கடவுச் சீட்டுக்குத் தட்டுப்பாடு நிலவியது.

இந்நிலையில்,புதிய கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்கு வந்துள்ளதால், 21/10/2024 முதல் இவை விநியோகிக்கப்படுகின்றன.

கரு நீல நிறத்தைக் கொண்ட புதிய சாதாரண கடவுச்சீட்டானது 48 பக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய கடவுச்சீட்டின் உட் பகுதிகளில் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய இடங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

சாதாரண கடவுச்சீட்டுக்கள் கருநீல நிறத்திலும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள்  பழுப்பு சிவப்பு நிறத்திலும்  இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் சிவப்பு நிறத்திலும் அச்சிடப்பட்டுள்ளன.

புதிய கடவுச்சீட்டில் முன்பில்லாதவாறு புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாது கடவுச்சீட்டில் ஒவ்வொரு பக்கங்களிலும் இலங்கையின் பிரசித்தி பெற்ற இடங்களை அச்சிட்டுள்ளனர்.

அதன்படி, 4 ஆம் பக்கத்தில் தலதாமாளிகை இலிருந்து ஆரம்பித்து நல்லூர் கந்தசுவாமி கோவில், கொழும்பு புனித லூசியா தேவாலயம், கொழும்பு பெரிய பள்ளிவாசல், அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம், அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை, பதுளை ஒன்பது வில் பாலம், மட்டக்களப்பு வாவி, கொழும்பு தாமரைக் கோபுரம், காலி கோட்டை, கம்பஹா இறப்பர் தோட்டம், ஹம்பாந்தோட்டை உப்பளம், களுத்துறை STILT மீனவர்கள், பின்னவல யானைகள் சரணாலயம், கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை, குருநாகல் யாப்பஹுவா குன்றுகள், தலைமன்னார் படகுத்துறை, சிகிரியா குன்று, மாத்தறை வெளிச்சவீடு, யால தேசிய பூங்கா, முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம், நுவரெலியா தேயிலை தோட்டம், பொலநறுவை பழமை நகரம், புத்தளம் டொல்பின் காட்சிக்காணல், சிவனொளிபாதமலை, திருகோணமலை புறாத்தீவு என 45ஆம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை வரை அச்சிடப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here