ஜனவரி 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 பேர் மீது இதுவரை சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலழஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவியரீதியில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய இந்த நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 3,876 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகவும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 190 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.