3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

0
66

வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

புத்தளம்  வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி நிறுவன கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 3000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here