தாய் இறந்த சோகத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு மகனும் உயிரிழந்த சம்பவமொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது – 32) என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தி யுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.