ATM ஊடாக பம்பலப்பிட்டியில் 4இலட்சம் ரூபா மோசடி

0
191

ATM இயந்திரமொன்றிலிருந்து 400,000 ரூபா மோசடியில் ஈடுபட்ட 36 வயது மதிக்கத்தக்க நபரொருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே குறித்த நபர் பம்மபலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ATM  அருகே இருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தொம்பே, கபுகொட பிரதேசத்தில் 10 ATM அட்டைகளுடன் இவர் வெள்ளிக்கிழமை கடந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here