Breaking NEWS இன்று முதல் மறு அறிவித்தல் வரை மஸ்கெலியா பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வேலை நிறுத்தம் – மஸ்கெலியா கம்பனி அறிவிப்பு

0
441

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் இன்று மறுஅறிவித்தல் வரை தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் குறித்த தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இப்போராட்டங்களின் போது தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டங்களில் இணைந்து கொண்டதுடன் மேற்படி விடயம் தொடர்பில் கம்பனிகளுக்கும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில், இ.தொ.க. குறித்த கம்பனி தரப்புடன் கொட்டக்கலை சி.எல்.எப் இல் வைத்த பேச்சுவார்த்தையொன்றையும் முன்னெடுத்திருந்ததுடன், பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்த போதிலும், இன்று முதல் மறு அறிவித்தல் வரை வேலை வழங்கப்படாது என மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தமக்கு கீழ் உள்ள அனைத்து தோட்டங்களுக்கும் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here