Breaking News – நள்ளிரவில் பஸ் விபத்தில் மூவர் பலி : பலர் காயம் – படங்கள் இணைப்பு

0
250

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு தனியார் பஸ் பாலத்தில் மோதுண்டு புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் 16 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு 12.15 மணியளவில் வவுனியா நொச்சுமோட்டை பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்தக்குள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதன்போது பஸ் சாரதி மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.

நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here